வரியார் கருங்கண் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 98 

வரியார் கருங்கண் – மடமாதர்
மகவா சைதொந்த – மதுவாகி

இருபோ துநைந்து – மெலியாதே
இருதா ளினன்பு – தருவாயே

பரிபா லனஞ்செய் – தருள்வோனே
பரமே சுரன்ற – னருள்பாலா

அரிகே சவன்றன் – மருகோனே
அலைவா யமர்ந்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : விதி போலும் உந்து (திருச்செந்தூர்) – திருப்புகழ் 99 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *