விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்) – திருப்புகழ் 101

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து – வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் – வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப – மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து – குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த – மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த – அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் – களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : வெங்காளம் பாணம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 102 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *