சரஸ்வதி தட்சிணாமூர்த்தி கொண்டைக்கடலை ஏன்?

சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்தியமும், தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவிப்பது முக்கியம்.

இதற்கான காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவரும் ஞானத்தை அளிப்பவர்கள். இருவரும் ஜெபமாலைகளையும் ஏட்டுச்சுவடிகளையும் சுமந்துள்ளனர்.

இருவருமே மனத்தூய்மை, மெய்ஞானம், சாந்தம் ஆகிய உயர் பண்பை உணர்த்தும் வகையில் ஜடாமகுடம், சந்திரகலை ஆகிய ஸ்படிக மாலைகளை அணிந்திருப்பதைக் காணலாம். கொண்டைக்கடலையில் உயிர் காக்கும் சத்துக்கள் உள்ளன.

கல்வி மனித வாழ்வின் உயிர்நாடி. கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை பிரசாதமாக வழங்குங்கள்.

ஜாதகத்தில் குரு வலுவாக இல்லாவிட்டால், அவரது உயிருக்கு பாதகம் ஏற்படலாம். எனவே, நவகிரகங்களில் குருவின் பார்வை வேண்டி, குருவுக்கும், குருவின் அவதாரமான தட்சிணாமூர்த்திக்கும் கொண்டைக்கடலை மாலைகள் படைத்து தீர்க்காயுள் வேண்டி வழிபடுகின்றனர்.

இதையும் படிக்கலாம் : கல்வியில் சிறக்க சரஸ்வதி தேவி மந்திரம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *