ஓடி ஓடி (பழனி) – திருப்புகழ் 125

ஓடி யோடி யழைத்துவ ரச்சில
சேடி மார்கள் பசப்பஅ தற்குமு
னோதி கோதி முடித்தவி லைச்சுரு – ளதுகோதி

நீடு வாச நிறைத்தஅ கிற்புழு
கோட மீது திமிர்த்தத னத்தினில்
நேச மாகி யணைத்தசி றுக்கிக – ளுறவாமோ

நாடி வாயும் வயற்றலை யிற்புன
லோடை மீதி னிலத்ததி வட்கையி
னாத கீத மலர்த்துளி பெற்றளி – யிசைபாடுங்

கோடு லாவி யமுத்துநி ரைத்தவை
காவுர் நாட தனிற்பழ நிப்பதி
கோதி லாத குறத்திய ணைத்தருள் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கடலைச் சிறை (பழனி) – திருப்புகழ் 126

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *