விநாயகரின் அறுபடை வீடுகள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் போல அவரது அண்ணனான விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருக்கின்றன. விநாயகரின் அறுபடை வீடுகளுக்கும் சென்று அவரை வழிபட்டு வருவது சிறப்பாகும்.

விநாயகரை வழிபடுவதால் காரியம் கைக்கூடும் மற்றும் நம்முடைய தடைகளையெல்லாம் நீக்குவார்.

விநாயகரின் அறுபடை வீடுகள்

  • அல்லல் போக்கும் விநாயகர் – திருவண்ணாமலை
  • ஆழத்து விநாயகர் – திருமுதுகுன்றம்
  • கள்ளவாரணப் விநாயகர் – திருக்கடவூர்
  • சித்தி விநாயகர் – மதுரை
  • கற்பக விநாயகர் – பிள்ளையார்பட்டி
  • பொள்ளாப் விநாயகர் – திருநாரையூர்

vinayagar arupadi veedu

முதல் படைவீடு – அல்லல் போக்கும் விநாயகர்

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தான் இந்த அல்லல் போக்கும் விநாயகர் அருள்பாலிக்கிறார். இந்த விநாயகப் பெருமானைப் போற்றும் பாடல் “அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்”. இவரை வணங்கினால் எல்லா பிரச்சனைகளும் தீரும். இந்த விநாயகரை வழிபடுவதால் நாம் செய்த அனைத்து தீவினைகளை அழித்து, நல்வினைகளுக்கேற்ப முன்னேற்றத்தை தருகிறார்.

இரண்டாம் படைவீடு – ஆழத்து விநாயகர்

விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தான் ஆழத்து விநாயகர் இருக்கிறார். இந்த விநாயகப் பெருமானைத் வழிபடுவதன் மூலம் செல்வமும், கல்வியும், சீரான வாழ்வும் நம்மை நம்மை வந்து சேரும்.

மூன்றாவது படைவீடு – கள்ளவாரணப் விநாயகர்

திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தான் இந்த கள்ளவாரணப் விநாயகர் அருள்பாலிக்கிறார். இவர் பக்தர்களின் மனதை கவர்வதால், கள்ள வாரணப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். இவரை வழிபட்டால் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை வழங்கி, சுக வாழ்வினை அளிக்கிறார்

நான்காம் படைவீடு – சித்தி விநாயகர்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதியின் நுழைவு வாயிலின் இடது புறமாக சித்தி விநாயகர் அருள்பாலிக்கிறார். இந்த சித்தி விநாயகரை வழிபடுபவர்களுக்கு வாழ்வின் எல்லா சித்திகளையும் (வெற்றி) அருளுகிறார்.

ஐந்தாம் படைவீடு – கற்பக விநாயகர்

ஐந்தாம் படை வீட்டிற்கு அதிபதி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர். அவர் கையில் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது ஒரு சிறப்பு. சிவலிங்கத்தை கைகளில் ஏந்தி சிவபூஜை செய்யும் இந்த கற்பக விநாயகரை வழிபட்டால், தீட்சையும், ஞானமும் பெறலாம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட்டால் இந்துக்களின் புனித தலமான காசி தீட்ச கணபதியை தரிசித்த பலன் கிடைக்கும்.

ஆறாவது படைவீடு – பொள்ளாப் விநாயகர்

சிதம்பரம் அருகே திருநரையூரில் உள்ள பொள்ளாப் பிள்ளையார் கோயில் விநாயகப் பெருமானின் ஆறாவது படைவீடாகும். சிற்பியின் உளியால் செதுக்கப்படாமல் சுயம்பாக தோன்றியதால் பொள்ளாப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். காலப்போக்கில் இது மருவி பொல்லாப் பிள்ளையார் என அழைக்கப்பட்டது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற நாயன்மார்கள் பொல்லாப்பிள்ளையாரை வழிபட்டனர். இவரை வழிபடுவதன் மூலம் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மேலும், கல்வியும் ஞானமும் மேம்படும்.

இதையும் படிக்கலாம் : விநாயகருக்குரிய அபிஷேகங்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *