சீறல் அசடன் (பழநி) – திருப்புகழ் 159 

சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி – பவநோயே

தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி – எவரோடுங்

கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு – னடிபேணாக்

கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் – புரிவாயே

மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி – புனைவோனே

மாக முகடதிர வீ சு சிறைமயிலை
வாசி யெனவுடைய – முருகோனே

வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை – யுடையோனே

வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : சுருதி முடி மோனம் (பழநி) – திருப்புகழ் 160

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *