தமரும் அமரும் (பழநி) – திருப்புகழ் 165 

தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் – அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய – எறியாதே

கமல விமல மரக தமணி
கனக மருவு – மிருபாதங்

கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு – தரவேணும்

குமர சமர முருக பரம
குலவு பழநி – மலையோனே

கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி – மணவாளா

அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் – தருள்வோனே

அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : தலைவலி மருத்தீடு (பழநி) – திருப்புகழ் 166 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *