செகமாயை உற்று (சுவாமிமலை) – திருப்புகழ் 218 

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப – முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த – பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி – லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி – தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க – வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த – குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் – முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : பழனி திருப்புகழ்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *