
தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும் – வசையாலே
தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் – மதியாலே
பொருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங் – கணையாலே
புளகித முலையா ளலையா
மனஞ்ச லித்தும் – விடலாமோ
ஒருமலை யிருகூ றெழவே
யுரம்பு குத்தும் – வடிவேலா
ஒளிவளர் திருவே ரகமே
யுகந்து நிற்கும் – முருகோனே
அருமறை தமிழ்நூ லடைவே
தெரிந்து ரைக்கும் – புலவோனே
அரியரி பிரமா தியர்கால்
விலங்க விழ்க்கும் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : நாசர்தங் கடை (சுவாமிமலை) – திருப்புகழ் 222