தெருவினில் நடவா (சுவாமிமலை) – திருப்புகழ் 221 

தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும் – வசையாலே

தினகர னெனவே லையிலே
சிவந்து திக்கும் – மதியாலே

பொருசிலை வளையா இளையா
மதன்தொ டுக்குங் – கணையாலே

புளகித முலையா ளலையா
மனஞ்ச லித்தும் – விடலாமோ

ஒருமலை யிருகூ றெழவே
யுரம்பு குத்தும் – வடிவேலா

ஒளிவளர் திருவே ரகமே
யுகந்து நிற்கும் – முருகோனே

அருமறை தமிழ்நூ லடைவே
தெரிந்து ரைக்கும் – புலவோனே

அரியரி பிரமா தியர்கால்
விலங்க விழ்க்கும் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : நாசர்தங் கடை (சுவாமிமலை) – திருப்புகழ் 222

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *