சுவாமிமலை திருப்புகழ்..!

திருப்புகழ் 201 அவாமருவு (சுவாமிமலை)

 

அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு

மவார்கனலில் வாழ்வென் – றுணராதே

 

அராநுக ரவாதையு றுதேரைக திநாடும

றிவாகியுள மால்கொண் – டதனாலே

 

சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி

மிராகரனை வாவென் – றருள்வாயே

 

திரோதம லமாறும டியார்கள ருமாதவர்

தியானமுறு பாதந் – தருவாயே

 

உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன

முலாசமுட னேறுங் – கழலோனே

 

உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ

ளிவாகுமயில் வேலங் – கையிலோனே

 

துவாதச புயாசல ஷடாநந வராசிவ

சுதாஎயினர் மானன் – புடையோனே

 

சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு

சுவாமிமலை வாழும் – பெருமாளே.

 

திருப்புகழ் 202 ஆனனம் உகந்து (சுவாமிமலை)

 

ஆனனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன

ஆரமுது கண்டு தேனென – இதழூறல்

 

ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென

ஆனையுர மெங்கு மோதிட – அபிராம

 

மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில்

மாயுமனு வின்ப வாசைய – தறவேயுன்

 

வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதக

வாசகம்வ ழங்கி யாள்வது – மொருநாளே

 

ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள்

ஈடழிய வென்று வானவர் – குலசேனை

 

ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர

ராசதம றிந்த கோமள – வடிவோனே

 

சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு

தோளுடைய கந்த னேவய – லியில்வாழ்வே

 

சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு

ஸ்வாமிமலை நின்று லாவிய – பெருமாளே.

 

திருப்புகழ் 203 ஆனாத பிருதி (சுவாமிமலை)

 

ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்

மாமாய விருளுமற் றேகி பவமென

வாகாச பரமசிற் சோதி பரையைய – டைந்துளாமே

 

ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்

யோகீச ரெவருமெட் டாத பரதுரி

யாதீத மகளமெப் போது முதயம – நந்தமோகம்

 

வானாதி சகலவிஸ்த் தார விபவரம்

லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்

மாலீச ரெனுமவற் கேது விபுலம – சங்கையால்நீள்

 

மாளாத தனிசமுற் றாய தரியநி

ராதார முலைவில்சற் சோதி நிருபமு

மாறாத சுகவெளத் தாணு வுடனினி – தென்றுசேர்வேன்

 

நானாவி தகருவிச் சேனை வகைவகை

சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு

நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி – லங்கைசாய

 

நாலாறு மணிமுடிப் பாவி தனையடு

சீராமன் மருகமைக் காவில் பரிமள

நாவீசு வயலியக் கீசர் குமரக – டம்பவேலா

 

கானாளு மெயினர்தற் சாதி வளர்குற

மானோடு மகிழ்கருத் தாகி மருடரு

காதாடு முனதுகட் பாண மெனதுடை – நெஞ்சுபாய்தல்

 

காணாது மமதைவிட் டாவி யுயவருள்

பாராயெ னுரைவெகுப் ப்ரீதி யிளையவ

காவேரி வடகரைச் சாமி மலையுறை – தம்பிரானே.

 

திருப்புகழ் 204 இராவினிருள் போலும் (சுவாமிமலை)  

 

இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்

இராமசர மாகும் – விழியாலும்

 

இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்

இராதஇடை யாலும் – இளைஞோர்நெஞ்

 

சராவியிரு போதும் பராவிவிழ வேவந்

தடாதவிலை கூறும் – மடவாரன்

 

படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்

அநாதிமொழி ஞானந் – தருவாயே

 

குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்

குலாவியினி தோதன் – பினர்வாழ்வே

 

குணாலமிடு சூரன் பணாமுடிக டோறுங்

குடாவியிட வேலங் – கெறிவோனே

 

துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந்

தொடாமல்வினை யோடும் – படிநூறுஞ்

 

சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்

சுவாமிமலை வாழும் – பெருமாளே.

 

திருப்புகழ் 205 இருவினை புனைந்து (சுவாமிமலை)  

 

இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி

னிருவினை யிடைந்து போக – மலமூட

 

விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத

மிலையென இரண்டு பேரு – மழகான

 

பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர்

பணியவிண் மடந்தை பாத – மலர்தூவப்

 

பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட

பருமயி லுடன்கு லாவி – வரவேணும்

 

அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம்

அடியென விளங்கி யாடு – நடராஜன்

 

அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம்

அயலணி சிவன்பு ராரி – யருள்சேயே

 

மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி

மறலியுண வென்ற வேலை – யுடையோனே

 

வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி

மலைமிசை விளங்கு தேவர் – பெருமாளே.

 

திருப்புகழ் 206 எந்தத் திகையினும் (சுவாமிமலை)

 

எந்தத் திகையினு மலையினு முவரியி

னெந்தப் படியினு முகடினு முளபல

எந்தச் சடலமு முயிரியை பிறவியி – னுழலாதே

 

இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி

னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு

என்சித் தமுமன முருகிநல் சுருதியின் – முறையோடே

 

சந்தித் தரஹர சிவசிவ சரணென

கும்பிட் டிணையடி யவையென தலைமிசை

தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் – குதிபாயச்

 

சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு

னந்தத் திருநட மிடுசர ணழகுற

சந்தச் சபைதனி லெனதுள முருகவும் – வருவாயே

 

தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி

தந்தத் தனதன டுடுடுடு டமடம

துங்கத் திசைமலை யுவரியு மறுகச – லரிபேரி

 

துன்றச் சிலைமணி கலகல கலினென

சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர

துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு – மயில்வேலா

 

கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி

யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத

கந்தப் பரிமள தனகிரி யுமையரு – ளிளையோனே

 

கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்

அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்

கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய – பெருமாளே.

 

திருப்புகழ் 207 ஒருவரையும் ஒருவர் (சுவாமிமலை)

 

ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந்

திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந்

துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் – சனையாலே

 

ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்

கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந்

தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் – திடுவேனைக்

 

கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன்

செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன்

கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் – டருமாமென்

 

கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந்

தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண்

கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் – தெனையாள்வாய்

 

திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன்

தருணமழ விடையனட ராஜ னெங்கணுந்

திகழருண கிரிசொருப னாதி யந்தமங் – கறியாத

 

சிவயநம நமசிவய கார ணன்சுரந்

தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன்

திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும் – புதல்வோனே

 

குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம்

புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங்

குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் – திடுவோனே

 

குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம்

பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண்

குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் – பெருமாளே.

 

திருப்புகழ் 208 கடாவினிடை (சுவாமிமலை)

 

கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்

கடாவினிக ராகுஞ் – சமனாருங்

 

கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்

கனாவில்விளை யாடுங் – கதைபோலும்

 

இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்

கிராமலுயிர் கோலிங் – கிதமாகும்

 

இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்

றியானுமுனை யோதும் – படிபாராய்

 

விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்

வியாகரண ஈசன் – பெருவாழ்வே

 

விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்

விநாசமுற வேலங் – கெறிவோனே

 

தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்

சுவாசமது தானைம் – புலனோடுஞ்

 

சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்

சுவாமிமலை வாழும் – பெருமாளே.

 

திருப்புகழ் 209 கடிமா மலர்க்குள் (சுவாமிமலை)

 

கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு

தருமா கடப்ப மைந்த – தொடைமாலை

 

கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த

கருணா கரப்ர சண்ட – கதிர்வேலா

 

வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்

முடியான துற்று கந்து – பணிவோனே

 

வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து

மலர்வாயி லக்க ணங்க – ளியல்போதி

 

அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று

னருளால ளிக்கு கந்த – பெரியோனே

 

அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த

ணருளே தழைத்து கந்து – வரவேணும்

 

செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த

படிதான லக்க ணிங்க – ணுறலாமோ

 

திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த

திருவேர கத்த மர்ந்த – பெருமாளே.

 

திருப்புகழ் 210 கதிரவனெ ழுந்து (சுவாமிமலை)

 

கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது

கடலளவு கண்டு மாய – மருளாலே

 

கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்

கவினறந டந்து தேயும் – வகையேபோய்

 

இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு

மிடமிடமி தென்று சோர்வு – படையாதே

 

இசையொடுபு கழந்த போது நழுவியப்ர சண்டர் வாச

லிரவுபகல் சென்று வாடி – யுழல்வேனோ

 

மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக

மலர்வளநி றைந்த பாளை – மலரூடே

 

வகைவகையெ ழுந்த சாம வதிமறைவி யந்து பாட

மதிநிழலி டுஞ்சு வாமி – மலைவாழ்வே

 

அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப

அணிமயில்வி ரும்பி யேறு – மிளையோனே

 

அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்ட பாவை

அருள்புதல்வ அண்ட ராஜர் – பெருமாளே.

 

திருப்புகழ் 211 கறை படும் உடம்பு (சுவாமிமலை)

 

கறைபடுமு டம்பி ராதெனக்

கருதுதலொ ழிந்து வாயுவைக்

கருமவச னங்க ளால்மறித் – தனலூதிக்

 

கவலைபடு கின்ற யோககற்

பனைமருவு சிந்தை போய்விடக்

கலகமிடு மஞ்சும் வேரறச் – செயல்மாளக்

 

குறைவறநி றைந்த மோனநிர்க்

குணமதுபொ ருந்தி வீடுறக்

குருமலைவி ளங்கு ஞானசற் – குருநாதா

 

குமரசர ணென்று கூதளப்

புதுமலர்சொ ரிந்து கோமளப்

பதயுகள புண்ட ரீகமுற் – றுணர்வேனோ

 

சிறைதளைவி ளங்கு பேர்முடிப்

புயலுடன டங்க வேபிழைத்

திமையவர்கள் தங்க ளூர்புகச் – சமராடித்

 

திமிரமிகு சிந்து வாய்விடச்

சிகரிகளும் வெந்து நீறெழத்

திகிரிகொள நந்த சூடிகைத் – திருமாலும்

 

பிறைமவுலி மைந்த கோவெனப்

பிரமனைமு னிந்து காவலிட்

டொருநொடியில் மண்டு சூரனைப் – பொருதேறிப்

 

பெருகுமத கும்ப லாளிதக்

கரியெனப்ர சண்ட வாரணப்

பிடிதனைம ணந்த சேவகப் – பெருமாளே.

 

திருப்புகழ் 212 காமியத் தழுந்தி (சுவாமிமலை)

 

காமியத் தழுந்தி – யிளையாதே

காலர்கைப் படிந்து – மடியாதே

 

ஓமெழுத் திலன்பு – மிகவூறி

ஓவியத் திலந்த – மருள்வாயே

 

தூமமெய்க் கணிந்த – சுகலீலா

சூரனைக் கடிந்த – கதிர்வேலா

 

ஏமவெற் புயர்ந்த – மயில்வீரா

ஏரகத் தமர்ந்த – பெருமாளே.

 

திருப்புகழ் 213 குமரகுருபர முருக குகனே (சுவாமிமலை)

 

குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி

கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்

குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு – முருகாதே

 

குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்

தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை

கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க – ளனைவோரும்

 

தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்

முலையிலுறு துகில்சரிய நடுவீ திநிற்பவர்கள்

தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் – வலையாலே

 

சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்

வசமொழுகி யவரடிமை யெனமா தரிட்டதொழில்

தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் – தருவாயே

 

சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு

தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி

தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு – செருமீதே

 

தவனமொடு மலகைநட மிடவீ ரபத்திரர்க

ளதிரநிண மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய்

தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் – பலகோடி

 

திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி

வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு

திமிரதிந கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு – முருகோனே

 

திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி

லடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர்

சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை – பெருமாளே.

 

திருப்புகழ் 214 குமர குருபர முருக சரவண (சுவாமிமலை)

 

குமர குருபர முருக சரவண

குகசண் முககரி – பிறகான

 

குழக சிவசுத சிவய நமவென

குரவ னருள்குரு – மணியேயென்

 

றமுத இமையவர் திமிர்த மிடுகட

லதென அநுதின – முனையோதும்

 

அமலை அடியவர் கொடிய வினைகொடு

மபய மிடுகுர – லறியாயோ

 

திமிர எழுகட லுலக முறிபட

திசைகள் பொடிபட – வருசூரர்

 

சிகர முடியுடல் புவியில் விழவுயிர்

திறைகொ டமர்பொரு – மயில்வீரா

 

நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்

நதிகொள் சடையினர் – குருநாதா

 

நளின குருமலை மருவி யமர்தரு

நவிலு மறைபுகழ் – பெருமாளே.

 

திருப்புகழ் 215 கோமள வெற்பினை (சுவாமிமலை)

 

கோமள வெற்பினை யொத்தத னத்தியர்

காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள்

கோவையி தழ்க்கனி நித்தமும் விற்பவர் – மயில்காடை

 

கோகில நற்புற வத்தொடு குக்குட

ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றிகல்

கோலவி ழிக்கடை யிட்டும ருட்டிகள் – விரகாலே

 

தூமம லர்ப்பளி மெத்தைப டுப்பவர்

யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர்

சோலைவ னக்கிளி யொத்தமொ ழிச்சியர் – நெறிகூடா

 

தூசுநெ கிழ்த்தரை சுற்றியு டுப்பவர்

காசுப றிக்கம றித்துமு யக்கிகள்

தோதக வித்தைப டித்துந டிப்பவ – ருறவாமோ

 

மாமர மொத்துவ ரிக்குணெ ருக்கிய

சூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடி

வாரண மெச்சஅ ளித்தஅ யிற்குக – கதிர்காம

 

மாமலை யிற்பழ நிப்பதி யிற்றனி

மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர

மாகிரி யிற்றிரை சுற்றிவ ளைத்திடும் – அலைவாயில்

 

ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி

னாலுல கத்தினி லுற்றுறு பத்தர்கள்

ஏதுநி னைத்தது மெத்தஅ ளித்தரு – ளிளையோனே

 

ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு

வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ

ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் – பெருமாளே.

 

திருப்புகழ் 216 சரண கமலாலயத்தை (சுவாமிமலை)

 

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்

தவமுறைதி யானம் வைக்க – அறியாத

 

சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த

தமியன்மிடி யால்ம யக்க – முறுவேனோ

 

கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு

கயிலைமலை நாதர் பெற்ற – குமரோனே

 

கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை

கமழுமண மார்க டப்ப – மணிவோனே

 

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய

சகலசெல்வ யோக மிக்க – பெருவாழ்வு

 

தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து

தவிபுரிய வேணு நெய்த்த – வடிவேலா

 

அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க

அரியதமிழ் தான ளித்த – மயில்வீரா

 

அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த

அழகதிரு வேர கத்தின் – முருகோனே.

 

திருப்புகழ் 217 சுத்திய நரப்புடன் (சுவாமிமலை)

 

சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ

டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை

சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் – சங்குமூளை

 

துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு

குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி

துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக – வங்கமூடே

 

எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற

லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை

எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் – பஞ்சபூதம்

 

எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை

யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல்

எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் – மங்குவேனோ

 

தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை

யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள்

சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள – மண்டியோடச்

 

சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர்

கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென

சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட – வென்றவேலா

 

சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன

ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர்

சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட – னங்கொள்வேளே

 

செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு

றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை

சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் – தம்பிரானே.

 

திருப்புகழ் 218 செகமாயை உற்று (சுவாமிமலை)

 

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த

திருமாது கெர்ப்ப – முடலூறித்

 

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்

திரமாய ளித்த – பொருளாகி

 

மகவாவி னுச்சி விழியாந நத்தில்

மலைநேர்பு யத்தி – லுறவாடி

 

மடிமீத டுத்து விளையாடி நித்த

மணிவாயின் முத்தி – தரவேணும்

 

முகமாய மிட்ட குறமாதி னுக்கு

முலைமேல ணைக்க – வருநீதா

 

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்

மொழியேயு ரைத்த – குருநாதா

 

தகையாதெ னக்கு னடிகாண வைத்த

தனியேர கத்தின் – முருகோனே

 

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்

சமர்வேலெ டுத்த – பெருமாளே.

 

திருப்புகழ் 219 சேலும் அயிலும் (சுவாமிமலை)

 

சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண்

மாதரைவ சம்ப டைத்த – வசமாகிச்

 

சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தை

காலமுமு டன்கி டக்கு – மவர்போலே

 

காலுமயி ரும்பி டித்து மேவுசிலு கும்பி ணக்கு

நாளுமிக நின்ற லைத்த – விதமாய

 

காமகல கம்பி ணித்த தோதகமெ னுந்து வக்கி

லேயடிமை யுங்க லக்க – முறலாமோ

 

ஏலமில வங்க வர்க்க நாகம்வகு ளம்ப டப்பை

பூகமரு தந்த ழைத்த – கரவீரம்

 

யாவுமலை கொண்டு கைத்த காவிரிபு றம்பு சுற்றும்

ஏரகம மர்ந்த பச்சை – மயில்வீரா

 

சோலைமடல் கொண்டு சக்ர மால்வரைய ரிந்த வஜ்ர

பாணியர்தொ ழுந்தி ருக்கை – வடிவேலா

 

சூர்முதிர்க்ர வுஞ்ச வெற்பும் வேலைநில மும்ப கைத்த

சூரனுட லுந்து ணித்த – பெருமாளே.

 

திருப்புகழ் 220 தருவர் இவர் (சுவாமிமலை)

 

தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு

தனைவிடுசொல் தூது தண்ட – முதலான

 

சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப

தருமுதல தான செஞ்சொல் – வகைபாடி

 

மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்து

வரினுமிவர் வீத மெங்க – ளிடமாக

 

வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல்

மடையரிட மேந டந்து – மனம்வேறாய்

 

உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்து

உழல்வதுவு மேத விர்ந்து – விடவேநல்

 

உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்ப

முதவியெனை யாள அன்பு – தருவாயே

 

குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்

குதிகொளிள வாளை கண்டு – பயமாகக்

 

குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு

குருமலையின் மேல மர்ந்த – பெருமாளே.

 

திருப்புகழ் 221 தெருவினில் நடவா (சுவாமிமலை)

 

தெருவினில் நடவா மடவார்

திரண்டொ றுக்கும் – வசையாலே

 

தினகர னெனவே லையிலே

சிவந்து திக்கும் – மதியாலே

 

பொருசிலை வளையா இளையா

மதன்தொ டுக்குங் – கணையாலே

 

புளகித முலையா ளலையா

மனஞ்ச லித்தும் – விடலாமோ

 

ஒருமலை யிருகூ றெழவே

யுரம்பு குத்தும் – வடிவேலா

 

ஒளிவளர் திருவே ரகமே

யுகந்து நிற்கும் – முருகோனே

 

அருமறை தமிழ்நூ லடைவே

தெரிந்து ரைக்கும் – புலவோனே

 

அரியரி பிரமா தியர்கால்

விலங்க விழ்க்கும் – பெருமாளே.

 

திருப்புகழ் 222 – நாசர்தங் கடை (சுவாமிமலை)

 

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து – தடுமாறி

ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி – மெலியாதே

 

மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப கர்ந்து – சுகமேவி

மாமணங் கமழுமிரு கமலபா தத்தை நின்று – பணிவேனோ

 

வாசகம் புகலவொரு பரமர்தா மெச்சு கின்ற …… குருநாதா

வாசவன் தருதிருவை யொருதெய்வா னைக்கி ரங்கு – மணவாளா

 

கீசகஞ் சுரர்தருவு மகிழுமா வத்தி சந்து – புடைசூழுங்

கேசவன் பரவுகுரு மலையில்யோ கத்த மர்ந்த – பெருமாளே.

 

திருப்புகழ் 223 – நாவேறு பா மணத்த (சுவாமிமலை)

 

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து

நாலாறு நாலு பற்று – வகையான

 

நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி

நாடோறு நானு ரைத்த – நெறியாக

 

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க

நேராக வாழ்வ தற்கு – னருள்கூர

 

நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை

நீகாணெ னாவ னைச்சொ – லருள்வாயே

 

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி

சீராக வேயு ரைத்த – குருநாதா

 

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு

தீராகு காகு றத்தி – மணவாளா

 

காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த

காவார்சு வாமி வெற்பின் – முருகோனே

 

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி

காமாரி வாமி பெற்ற – பெருமாளே.

 

திருப்புகழ் 224 – நிலவினிலே (சுவாமிமலை)

 

நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து

நிறைகுழல் மீத ணிந்து – குழைதாவும்

 

நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள்

நினைவற வேமொ ழிந்து – மதனூலின்

 

கலபம னோக ரங்க ளளவற வேபு ரிந்து

கனியித ழேய ருந்தி – யநுராகக்

 

கலவியி லேமு யங்கி வனிதையர் பால்ம யங்கு

கபடனை யாள வுன்ற – னருள்கூராய்

 

உலகமொ ரேழு மண்ட ருலகமு மீசர் தங்கு

முயர்கயி லாய மும்பொன் – வரைதானும்

 

உயிரொடு பூத மைந்து மொருமுத லாகி நின்ற

உமையரு ளால்வ ளர்ந்த – குமரேசா

 

குலைபடு சூர னங்க மழிபட வேலெ றிந்த

குமரக டோர வெங்கண் – மயில்வாழ்வே

 

கொடுமுடி யாய்வ ளர்ந்து புயனிலை போலு யர்ந்த

குருமலை மீத மர்ந்த – பெருமாளே.

 

திருப்புகழ் 225 – நிறைமதி முகமெனும் (சுவாமிமலை)

 

நிறைமதி முகமெனு – மொளியாலே

நெறிவிழி கணையெனு – நிகராலே

 

உறவுகொள் மடவர்க – ளுறவாமோ

உனதிரு வடியினி – யருள்வாயே

 

மறைபயி லரிதிரு – மருகோனே

மருவல ரசுரர்கள் – குலகாலா

 

குறமகள் தனைமண – மருள்வோனே

குருமலை மருவிய – பெருமாளே.

 

திருப்புகழ் 226 – பரவரிதாகி (சுவாமிமலை)

 

பரவரி தாகிய வரையென நீடிய

பணைமுலை மீதினி – லுருவான

 

பணிகளு லாவிட இழையிடை சாய்தரு

பயிலிகள் வாள்விழி – அயிலாலே

 

நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர்

நிரைதரு மூரலி – னகைமீது

 

நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல்

நிலையெழ வேயலை – வதுவாமோ

 

அரவணை யார்குழை பரசிவ ஆரண

அரனிட பாகம – துறைசோதி

 

அமையுமை டாகினி திரிபுரை நாரணி

அழகிய மாதருள் – புதல்வோனே

 

குரவணி பூஷண சரவண தேசிக

குககரு ணாநிதி – அமரேசா

 

குறமக ளானைமின் மருவிய பூரண

குருகிரி மேவிய – பெருமாளே.

 

திருப்புகழ் 227 – பலகாதல் பெற்றிட (சுவாமிமலை)

 

பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு

பலனேபெ றப்பரவு – கயவாலே

 

பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல்

பதறாமல் வெட்கமறு – வகைகூறி

 

விலகாத லச்சைதணி மலையாமு லைச்சியர்கள்

வினையேமி குத்தவர்கள் – தொழிலாலே

 

விடமேகொ டுத்துவெகு பொருளேப றித்தருளும்

விலைமாதர் பொய்க்கலவி – யினிதாமோ

 

மலையேயெ டுத்தருளு மொருவாள ரக்கனுடல்

வடமேரெ னத்தரையில் – விழவேதான்

 

வகையாவி டுத்தகணை யுடையான்ம கிழ்ச்சிபெறு

மருகாக டப்பமல – ரணிமார்பா

 

சிலகாவி யத்துறைக ளுணர்வோர்ப டித்ததமிழ்

செவியார வைத்தருளு – முருகோனே

 

சிவனார்த மக்குரிய வுபதேச வித்தையருள்

திருவேர கத்தில்வரு – பெருமாளே.

 

திருப்புகழ் 228 – பாதி மதிநதி (சுவாமிமலை)

 

பாதி மதிநதி போது மணிசடை

நாத ரருளிய – குமரேசா

 

பாகு கனிமொழி மாது குறமகள்

பாதம் வருடிய – மணவாளா

 

காது மொருவிழி காக முறஅருள்

மாய னரிதிரு – மருகோனே

 

கால னெனையணு காம லுனதிரு

காலில் வழிபட – அருள்வாயே

 

ஆதி யயனொடு தேவர் சுரருல

காளும் வகையுறு – சிறைமீளா

 

ஆடு மயிலினி லேறி யமரர்கள்

சூழ வரவரு – மிளையோனே

 

சூத மிகவளர் சோலை மருவுசு

வாமி மலைதனி – லுறைவோனே

 

சூர னுடலற வாரி சுவறிட

வேலை விடவல – பெருமாளே.

 

திருப்புகழ் 229 – மகர கேதனத்தன் (சுவாமிமலை) –

 

மகர கேத னத்த னுருவி லானெ டுத்து

மதுர நாணி யிட்டு – நெறிசேர்வார்

 

மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த

வலிய சாய கக்கண் – மடமாதர்

 

இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து

இளமை போயொ ளித்து – விடுமாறு

 

இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து

னினிய தாள ளிப்ப – தொருநாளே

 

அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட

அதிர வேந டத்து – மயில்வீரா

 

அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு

அடைய வாழ்வ ளிக்கு – மிளையோனே

 

மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க

விழைசு வாமி வெற்பி – லுறைவோனே

 

விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க

வினவ வோது வித்த – பெருமாளே.

 

திருப்புகழ் 230 மருவே செறித்த (சுவாமிமலை)

 

மருவே செறித்த குழலார் மயக்கி

மதனா கமத்தின் – விரகாலே

 

மயலே யெழுப்பி யிதழே யருத்த

மலைபோல் முலைக்கு – ளுறவாகிப்

 

பெருகாத லுற்ற தமியேனை நித்தல்

பிரியாது பட்ச – மறவாதே

 

பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற

பெருவாழ்வு பற்ற – அருள்வாயே

 

குருவா யரற்கு முபதேசம் வைத்த

குகனே குறத்தி – மணவாளா

 

குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து

குடகா விரிக்கு – வடபாலார்

 

திருவே ரகத்தி லுறைவா யுமைக்கோர்

சிறுவா கரிக்கு – மிளையோனே

 

திருமால் தனக்கு மருகா வரக்கர்

சிரமே துணித்த – பெருமாளே.

 

திருப்புகழ் 231 முறுகு காள (சுவாமிமலை)

 

முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி

முளரி வேரி முகைய டர்ந்த – முலைமீதே

 

முழுகு காதல் தனைம றந்து பரம ஞான வொளிசி றந்து

முகமொ ராறு மிகவி ரும்பி – அயராதே

 

அறுகு தாளி நறைய விழ்ந்த குவளை வாச மலர்க ரந்தை

அடைய வாரி மிசைபொ ழிந்து – னடிபேணி

 

அவச மாகி யுருகு தொண்ட ருடன தாகி விளையு மன்பி

னடிமை யாகு முறைமை யொன்றை – அருள்வாயே

 

தறுகண் வீரர் தலைய ரிந்து பொருத சூர னுடல்பி ளந்து

தமர வேலை சுவற வென்ற – வடிவேலா

 

தரள மூர லுமைம டந்தை முலையி லார அமுத முண்டு

தரணி யேழும் வலம்வ ருந்திண் – மயில்வீரா

 

மறுவி லாத தினைவி ளைந்த புனம்வி டாம லிதணி ருந்து

வலிய காவல் புனைய ணங்கின் – மணவாளா

 

மருவு ஞாழ லணிசெ ருந்தி யடவி சூத வனநெ ருங்கி

வளர்சு வாமி மலைய மர்ந்த – பெருமாளே.

 

திருப்புகழ் 232 வாதமொடு சூலை (சுவாமிமலை)

 

வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து

மாவலிவி யாதி குன்ம – மொடுகாசம்

 

வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின்

மாதர்தரு பூஷ ணங்க – ளெனவாகும்

 

பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து

பாயலைவி டாது மங்க – இவையால்நின்

 

பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து

பாவமது பான முண்டு – வெறிமூடி

 

ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று

ஈனமிகு சாதி யின்க – ணதிலேயான்

 

ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன்

ஈரஅருள் கூர வந்து – எனையாள்வாய்

 

சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி

சூழுமதில் தாவி மஞ்சி – னளவாகத்

 

தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த

சுவாமிமலை வாழ வந்த – பெருமாளே.

 

திருப்புகழ் 233 வாரம் உற்ற (சுவாமிமலை)

 

வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பி

னீடு மெய்த்து யர்ந்து – வயதாகி

 

வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை

மார்க ளுக்கி சைந்து – பொருள்தேடி

 

ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த

மாப ணிக்கள் விந்தை – யதுவான

 

ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ

டாவி மெத்த நொந்து – திரிவேனோ

 

சூர னைத்து ரந்து வேர றப்பி ளந்து

சூழ்சு ரர்க்க ணன்பு – செயும்வீரா

 

சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த

சூத னுக்கி சைந்த – மருகோனே

 

ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று

தானி றைக்க வந்த – தொருசாலி

 

யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு

மேர கத்த மர்ந்த – பெருமாளே.

 

திருப்புகழ் 234 வார்குழலை (சுவாமிமலை)

 

வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழை

காதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடு

வாயிதழ் பொற்கம லர்க்குமி ழொத்துள – துண்டக்ரீவ

 

வார்கமு கிற்புய நற்கழை பொற்குவ

டாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணை

மார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர – ரம்பைமாதர்

 

காருறும் வித்திடை யிற்கத லித்தொடை

சேரல்குல் நற்பிர சத்தட முட்கொடு

கால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை – யொண்குலாவக்

 

கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெரு

மீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர்

காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர் – சந்தமாமோ

 

சூரர்ப தைக்கர வுட்கிநெ ளித்துய

ராழியி ரைப்பநி ணக்குட லைக்கழு

சூழந ரிக்கெரு டக்கொடி பற்பல – சங்கமாகச்

 

சூழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகை

யானையு ழற்றிந டுக்கிம தப்பொறி

சோரந கைத்தயி லைக்கொடு விட்டருள் – செங்கைவேலா

 

ஏரணி நற்குழ லைக்கக னச்சசி

மோகினி யைப்புணர் சித்தொரு அற்புத

வேடமு தச்சொரு பத்தகு றத்திம – ணங்கொள்வோனே

 

ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு

வாமிம லைப்பதி நிற்குமி லக்ஷண

ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் – தம்பிரானே.

 

திருப்புகழ் 235 வார்குழல் விரித்து (சுவாமிமலை)

 

வார்குழல் விரித்துத் தூக்கி வேல்விழி சுழற்றிப் பார்த்து

வாவென நகைத்துத் தோட்டு – குழையாட

 

வாசக முரைத்துச் சூத்ர பாவையெ னுறுப்பைக் காட்டி

வாசனை முலைக்கச் சாட்டி – யழகாகச்

 

சீர்கலை நெகிழ்த்துப் போர்த்து நூலிடை நெளித்துக் காட்டி

தீதெய நடித்துப் பாட்டு – குயில்போலச்

 

சேருற அழைத்துப் பார்த்து சார்வுற மருத்திட் டாட்டி

சீர்பொருள் பறிப்பொய்க் கூத்த – ருறவாமோ

 

சூரர்கள் பதைக்கத் தேர்க்க ளானைக ளழித்துத் தாக்கி

சூர்கிரி கொளுத்திக் கூற்று – ரிடும்வேலா

 

தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட வுதைத்துக் கோத்த

தோலுடை யெனப்பர்க் கேற்றி – திரிவோனே

 

ஏரணி சடைச்சிப் பாற்சொ லாரணி சிறக்கப் போற்று

மேரெழி னிறத்துக் கூர்த்த – மகவோனே

 

ஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறத்திக் கேற்ற

ஏரக பொருப்பிற் பூத்த – பெருமாளே.

 

திருப்புகழ் 236 விடமும் வடிவேலும் (சுவாமிமலை)

 

விடமும்வடி வேலு மதனச ரங்களும்

வடுவுநிக ரான மகரநெ டுங்குழை

விரவியுடன் மீளும் விழிகளு மென்புழு – கதுதோயும்

 

ம்ருகமதப டீர பரிமள குங்கும

மணியுமிள நீரும் வடகுல குன்றமும்

வெருவுவன பார புளகத னங்களும் – வெகுகாம

 

நடனபத நூபு ரமுமுகில் கெஞ்சிட

மலர்சொருகு கேச பரமுமி லங்கிய

நளினமலர் சோதி மதிமுக விம்பமும் – அனநேராம்

 

நடையுநளிர் மாதர் நிலவுதொ ழுந்தனு

முழுதுமபி ராம அரிவய கிண்கிணெ

னகையுமுள மாதர் கலவியி னைந்துரு – கிடலாமோ

 

வடிவுடைய மானு மிகல்கர னுந்திக

ழெழுவகைம ராம ரமுநிக ரொன்றுமில்

வலியதிறல் வாலி யுரமுநெ டுங்கட – லவையேழும்

 

மறநிருதர் சேனை முழுதுமி லங்கைமன்

வகையிரவி போலு மணியும லங்க்ருத

மணிமவுலி யான வொருபதும் விஞ்சிரு – பதுதோளும்

 

அடைவலமு மாள விடுசர அம்புடை

தசரதகு மார ரகுகுல புங்கவன்

அருள்புனைமு ராரி மருகவி ளங்கிய – மயிலேறி

 

அடையலர்கள் மாள வொருநிமி டந்தனி

லுலகைவல மாக நொடியினில் வந்துயர்

அழகியசு வாமி மலையில மர்ந்தருள் – பெருமாளே.

 

திருப்புகழ் 237 விரித்த பைங்குழல் (சுவாமிமலை)

 

விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன

தனத்த னந்தன தனதன வெனவொலி

விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு – மலைபாய

 

மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ

டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி

வெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர் – வரிபோதத்

 

தரித்த தந்திரி மறிபுய மிசைபல

பணிக்கி லங்கிய பரிமள குவடிணை

தனக்கொ ழுந்துகள் ததைபட கொடியிடை – படுசேலை

 

தரித்து சுந்தர மெனஅடர் பரிபுர

பதச்சி லம்பொடு நடமிடு கணிகையர்

சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ – தொழியாதோ

 

உரித்த வெங்கய மறியொடு புலிகலை

தரித்த சங்கரர் மதிநதி சடையினர்

ஒருத்தி பங்கின ரவர்பணி குருபர – முருகோனே

 

உவட்டி வந்திடு மவுணரொ டெழுகடல்

குவட்டை யும்பொடி படசத முடிவுற

வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற – விடும்வேலா

 

வரித்த ரந்துள வணிதிரு மருவிய

வுரத்த பங்கயர் மரகத மழகிய

வணத்த ரம்பர முறவிடு கணையினர் – மருகோனே

 

வனத்தில் வந்தொரு பழையவ னெனவொரு

குறத்தி மென்புன மருவிய கிளிதனை

மயக்கி மந்திர குருமலை தனிலமர் – பெருமாளே.

 

திருப்புகழ் 238 விழியால் மருட்டி (சுவாமிமலை)

 

விழியால்ம ருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு

விரகான லத்த ழுந்த – நகையாடி

 

விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்ச

விளையாட லுக்கி சைந்து – சிலநாள்மேல்

 

மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த

முழுமாயை யிற்பி ணங்கள் – வசமாகி

 

முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்று

முதிராத நற்ப தங்கள் – தருவாயே

 

பொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று

பொருதாளெ டுத்த தந்தை – மகிழ்வோனே

 

புருகூத னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட

புனிதாம்ரு கக்க ரும்பு – புணர்மார்பா

 

செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று

திருவாய்மை செப்பி நின்ற – முருகோனே

 

திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற

திருவேர கத்த மர்ந்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *