அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்) – திருப்புகழ் 28

அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக – அகலாதே

அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறலியெனை – யழையாதே

செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர – மருள்வாயே

சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் – பகர்வோனே

நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய – வனமாலி

நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை – விடுவோனே

மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு
மகிழமடி மிசைவளரு – மிளையோனே

மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : அனிச்சம் கார்முகம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 29 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *