இயலிசையில் உசித (திருச்செந்தூர்) – திருப்புகழ் 31

இயலிசையி லுசித வஞ்சிக் – கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித் – துழலாதே

உயர்கருணை புரியு மின்பக் – கடல்மூழ்கி
உனையெனது ளறியு மன்பைத் – தருவாயே

மயில்தகர்க லிடைய ரந்தத் – தினைகாவல்
வனசகுற மகளை வந்தித் – தணைவோனே

கயிலைமலை யனைய செந்திற் – பதிவாழ்வே
கரிமுகவ னிளைய கந்தப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : இருகுழை யெறிந்த (திருச்செந்தூர்) – திருப்புகழ் 32

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *