ஏவினை நேர்விழி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 36 

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை – நெறிபேணா

ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை – அகலாநீள்

மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை – யிகழாதே

மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது – மொருநாளே

நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் – குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி – லுடையோனே

தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு – சிறியோனே

சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : ஓராது ஒன்றை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 37

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *