கொங்கைப் பணை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 51

கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்
கொண்டற் குழலிற் – கொடிதான

கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்
கொஞ்சுக் கிளியுற் – றுறவான

சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்
சந்திப் பவரைச் – சருவாதே

சந்தப் படியுற் றென்றற் றலையிற்
சந்தப் பதம்வைத் – தருள்வாயே

அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
கந்திக் கடலிற் – கடிதோடா

அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
றஞ்சப் பொருதுற் – றொழியாதே

செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
சென்றுற் றவர்தற் – பொருளானாய்

சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
செந்திற் குமரப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கொடியனைய இடை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 52

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *