துன்பங்கொண்டு அங்கம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 65

துன்பங்கொண் டங்கமெ லிந்தற
நொந்தன்பும் பண்பும றந்தொளி
துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி – லணுகாதே

இன்பந்தந் தும்பர்தொ ழும்பத
கஞ்சந்தந் தஞ்சமெ னும்படி
யென்றென்றுந் தொண்டுசெ யும்படி – யருள்வாயே

நின்பங்கொன் றுங்குற மின்சர
ணங்கண்டுந் தஞ்சமெ னும்படி
நின்றன்பின் றன்படி கும்பிடு – மிளையோனே

பைம்பொன்சிந் தின்றுறை தங்கிய
குன்றெங்குஞ் சங்குவ லம்புரி
பம்புந்தென் செந்திலில் வந்தருள் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : தெருப்புறத்து (திருச்செந்தூர்) – திருப்புகழ் 66

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *