அறமிலா நிலை (பழனி) – திருப்புகழ் 111 

அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
ளறிவுதா னறவைத்து – விலைபேசி

அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை
யதிகமா வுதவிக்கை – வளையாலே

உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ
ளுலையிலே மெழுகொத்த – மடவாரோ

டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து
ஒழியுமா றொருமுத்தி – தரவேணும்

மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி
மயிலனாள் புணர்செச்சை – மணிமார்பா

மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க
மயிலிலே றியவுக்ர – வடிவேலா

பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி
பரமர்பா லுறைசத்தி – யெமதாயி

பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற
பழநிமா மலையுற்ற – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : ஆதாளிகள் புரி (பழனி) – திருப்புகழ் 112 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *