
எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் – தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென்- பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் – குளிமேவி
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந் – தொழுவேனோ
வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் – றவனீயே
விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் – புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் – முருகோனே
தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : எனை அடைந்த (திருத்தணிகை) – திருப்புகழ் 250