எனக்கென யாவும் (திருத்தணிகை) – திருப்புகழ் 249

எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் – தனிலோயா

எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென்- பவமாற

உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் – குளிமேவி

உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந் – தொழுவேனோ

வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் – றவனீயே

விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் – புகல்வோனே

சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் – முருகோனே

தினைப்புன மோவுங் குறக்கொடி யோடுந்
திருத்தணி மேவும் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : எனை அடைந்த (திருத்தணிகை) – திருப்புகழ் 250 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *