/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ கணபதி பஜனை பாடல் - Thagaval Kalam

கணபதி பஜனை பாடல்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும்
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

ஆறுமுக வேலனுக்கு, அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் ,தீர்த்து வைக்கும் பிள்ளையார்

மஞ்சளிலே செய்யுனும் ,மண்ணினாலே செய்யுனும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

ஓம் நமசிவாய மந்திரத்தை நெஞ்சில் நாட்டு பிள்ளையார்

அவல் பொரி கடலையும் , அரிசி கொழுக்கட்டையும் கவலையின்றி உண்ணுவார் கண்ணை மூடி தூங்குவார்
கலியுகத்தின் விந்தைகளைக் காணவேண்டி ,அனுதினம் எலியின் மீது ஏறியே இஷ்டம் போல சுத்துவார்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும்
வீற்றிருக்கும் பிள்ளையார்
வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

இதையும் படிக்கலாம் : ஒன்பது கோளும் ஒன்றாய் காண பாடல் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *