இலகிய களப (பழனி) – திருப்புகழ் 119 

இலகிய களபசு கந்த வாடையின்
ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ
இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை – யிதமாகக்

கலவியி லவரவர் தங்கள் வாய்தனி
லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள்
கசனையை விடுவது மெந்த நாளது – பகர்வாயே

சிலைதரு குறவர்ம டந்தை நாயகி
தினைவன மதனிலு கந்த நாயகி
திரள்தன மதனில ணைந்த நாயக – சிவலோகா

கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ
அயிலயி லதனையு கந்த நாயக
குருபர பழநியி லென்று மேவிய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : இலகுகனி மிஞ்சு (பழனி) – திருப்புகழ் 120

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *