
இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி – விடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகை
யெழுகள மாலை – யிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு – முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுன தாள்கள் – அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதி
மடியஅ நேக – இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட
வடிசுடர் வேலை – விடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
தருதிரு மாதின் – மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : பழனி திருப்புகழ்..!