காலனார் வெங்கொடும் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 46

காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
காலினார் தந்துடன் – கொடுபோகக்

காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
கானமே பின்தொடர்ந் – தலறாமுன்

சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
சூடுதோ ளுந்தடந் – திருமார்பும்

தூயதாள் தண்டையுங் காணஆர் வஞ்செயுந்
தோகைமேல் கொண்டுமுன் – வரவேணும்

ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்
தேவர்வா ழன்றுகந் – தமுதீயும்

ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
தாதிமா யன்றனன் – மருகோனே

சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்
சாரலார் செந்திலம் – பதிவாழ்வே

தாவுசூ ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
தாரைவே லுந்திடும் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : குகர மேவுமெய் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 47 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *