கமலரு சோகாம்பர (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 338 

கமலரு சோகாம்பர முடிநடு வேய்பூங்கணை
கலகமர் வாய்தோய்ந்தம – ளியின்மீதே

களையற மீதூர்ந்தெழ மதனவி டாய்போம்படி
கனவிய வாரேந்தின – இளநீர்தோய்ந்

தெமதுயிர் நீலாஞ்சன மதர்விழி யால்வாங்கிய
இவளுடன் மால்கூர்ந்திடு – மநுபோகம்

இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
இதவிய பாதாம்புய – மருள்வாயே

அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
அதுலன நீலாம்பர – மறியாத

அநகர நாளாங்கிதர் தமையுமை யாள்சேர்ந்தருள்
அறமுறு சீகாஞ்சியி – லுறைவோனே

விமலகி ராதாங்கனை தனகிரி தோய்காங்கெய
வெடிபடு தேவேந்திர – னகர்வாழ

விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
வினையற வேல்வாங்கிய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கருமமான பிறப்பற (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 339 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *