கருகிய கன்று வரிசெறி கண்கள்
கயல்நிக ரென்று – துதிபேசிக்
கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற
கடிவிட முண்டு – பலநாளும்
விரகுறு சண்ட வினையுடல் கொண்டு
விதிவழி நின்று – தளராதே
விரைகமழ் தொங்கல் மருவிய துங்க
விதபத மென்று – பெறுவேனோ
முருகக டம்ப குறமகள் பங்க
முறையென அண்டர் – முறைபேச
முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச
முரணசுர் வென்ற – வடிவேலா
பரிமள இன்ப மரகத துங்க
பகடித வென்றி – மயில்வீரா
பறிதலை குண்டர் கழுநிரை கண்டு
பழநிய மர்ந்த – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : கருப்புவிலில் (பழனி) – திருப்புகழ் 133