கருமமான பிறப்பற (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 339 

கரும மானபி றப்பற வொருகதி
காணா தெய்த்துத் – தடுமாறுங்

கலக காரண துற்குண சமயிகள்
நானா வர்க்கக் – கலைநூலின்

வரும நேகவி கற்பவி பரிதம
னோபா வத்துக் – கரிதாய

மவுன பூரித சத்திய வடிவினை
மாயா மற்குப் – புகல்வாயே

தரும வீம அருச்சுன நகுலச
காதே வர்க்குப் – புகலாகிச்

சமர பூமியில் விக்ரம வளைகொடு
நாளோர் பத்தெட் – டினிலாளுங்

குரும கீதல முட்பட வுளமது
கோடா மற்க்ஷத் – ரியர்மாளக்

குலவு தேர்கட வச்சுதன் மருககு
மாரா கச்சிப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கலகலென (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 340 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *