கொலை மதகரி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 54

கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
கும்பத் – தனமானார்

குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல்
கொண்டுற் – றிடுநாயேன்

நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி
நின்றுற் – றிடவேதான்

நினதிரு வடிமல ரிணைமன தினிலுற
நின்பற் – றடைவேனோ

சிலையென வடமலை யுடையவர் அருளிய
செஞ்சொற் – சிறுபாலா

திரைகட லிடைவரும் அசுரனை வதைசெய்த
செந்திற் – பதிவேலா

விலைநிகர் நுதலிப மயில்குற மகளும்வி
ரும்பிப் – புணர்வோனே

விருதணி மரகத மயில்வரு குமரவி
டங்கப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : சங்குபோல் மென் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 55 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *