மகர கேதனத்தன் (சுவாமிமலை) – திருப்புகழ் 229

மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
மதுர நாணி யிட்டு – நெறிசேர்வார்

மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
வலிய சாய கக்கண் – மடமாதர்

இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்து
இளமை போயொ ளித்து – விடுமாறு

இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
னினிய தாள ளிப்ப – தொருநாளே

அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
அதிர வேந டத்து – மயில்வீரா

அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
அடைய வாழ்வ ளிக்கு – மிளையோனே

மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
விழைசு வாமி வெற்பி – லுறைவோனே

விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
வினவ வோது வித்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : மருவே செறித்த (சுவாமிமலை) – திருப்புகழ் 230

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *