மருவே செறித்த (சுவாமிமலை) – திருப்புகழ் 230

மருவே செறித்த குழலார் மயக்கி
மதனா கமத்தின் – விரகாலே

மயலே யெழுப்பி யிதழே யருத்த
மலைபோல் முலைக்கு – ளுறவாகிப்

பெருகாத லுற்ற தமியேனை நித்தல்
பிரியாது பட்ச – மறவாதே

பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற
பெருவாழ்வு பற்ற – அருள்வாயே

குருவா யரற்கு முபதேசம் வைத்த
குகனே குறத்தி – மணவாளா

குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து
குடகா விரிக்கு – வடபாலார்

திருவே ரகத்தி லுறைவா யுமைக்கோர்
சிறுவா கரிக்கு – மிளையோனே

திருமால் தனக்கு மருகா வரக்கர்
சிரமே துணித்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : பழனி திருப்புகழ்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *