முட்டுப் பட்டு (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 330 

முட்டுப் பட்டுக் – கதிதோறும்
முற்றச் சுற்றிப் – பலநாளும்

தட்டுப் பட்டுச் – சுழல்வேனைச்
சற்றுப் பற்றக் – கருதாதோ

வட்டப் புட்பத் – தலமீதே
வைக்கத் தக்கத் – திருபாதா

கட்டத் தற்றத் – தருள்வோனே
கச்சிச் சொக்கப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : அற்றைக் கற்றை (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 331 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *