நாவேறு பா மணத்த (சுவாமிமலை) – திருப்புகழ் 223

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
நாலாறு நாலு பற்று – வகையான

நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்த – நெறியாக

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ்வ தற்கு – னருள்கூர

நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ னாவ னைச்சொ – லருள்வாயே

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராக வேயு ரைத்த – குருநாதா

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
தீராகு காகு றத்தி – மணவாளா

காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
காவார்சு வாமி வெற்பின் – முருகோனே

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமி பெற்ற – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : நிலவினிலே (சுவாமிமலை) – திருப்புகழ் 224

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *