நிலையாப் பொருளை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 72

நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது – மவமேபோய்

நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் – தடுமாறி

மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய – நெறியாக

மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல – மருள்வாயே

கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற – முதுசூதம்

குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதிவேற் படையை – விடுவோனே

அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித – வடிவாகும்

அரனார்க் கதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : நிறுக்குஞ் சூதன (திருச்செந்தூர்) – திருப்புகழ் 73 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *