ஓராது ஒன்றை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 37

ஓரா தொன்றைப் பாரா தந்தத்
தோடே வந்திட் – டுயிர்சோர

ஊடா நன்றற் றார்போல் நின்றெட்
டாமால் தந்திட் – டுழல்மாதர்

கூரா வன்பிற் சோரா நின்றக்
கோயா நின்றுட் – குலையாதே

கோடார் செம்பொற் றோளா நின்சொற்
கோடா தென்கைக் – கருள்தாராய்

தோரா வென்றிப் போரா மன்றற்
றோளா குன்றைத் – தொளையாடீ

சூதா யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் – பொரும்வேலா

சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவே றெந்தைக் – கினியோனே

தேனே யன்பர்க் கேயா மின்சொற்
சேயே செந்திற் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கட்டழகு விட்டு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 38

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *