
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் – துணரேனே
உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் – தறியேனே
பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் – குறியேனே
பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் – தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் – பெருமாளே
தொழுதுவழி படுமடியர் காவற் காரப் – பெருமாளே
விருதுகவி விதரணவி நோதக் காரப் – பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : ஒருவரை ஒருவர் (பழனி) – திருப்புகழ் 124