பால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்

ஆண்டார்குப்பம் ஸ்ரீபாலசுப்ரமணியரை வழிபட்டால் குழந்தைப்பேறு நிச்சயம். இதற்கென வழிபாட்டு முறை உள்ளது.

மாதந்தோறும் பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தன்று குழந்தை பாக்கியம் பெற விரும்பும் பெண்கள் ஆண்டார் குப்பத்தில் தங்கி வழிபாடு செய்ய வேண்டும்.

மறுநாள் காலை எழுந்தவுடன் நீராடிவிட்டு முருகனுக்கு பால் அபிஷேகத்தில் பங்கேற்பார்கள்.

கிருத்திகை பூஜையை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோயிலில் உள்ள ஆலமரங்களுக்கு அருகில் குழந்தை பாக்கியம் வேண்டி அந்த மரத்தில் தொட்டில் கட்டுவார்கள்.

நூற்றுக்கணக்கான தொட்டில்கள் காணப்படுகிறது. இதன் மூலம் பலர் பயனடைந்துள்ளனர்.

இதையும் படிக்கலாம் : முருகன் அருளை பெற 7 நாட்கள் சொல்லவேண்டிய துதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *