
பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய – குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய – மணவாளா
காது மொருவிழி காக முறஅருள்
மாய னரிதிரு – மருகோனே
கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட – அருள்வாயே
ஆதி யயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு – சிறைமீளா
ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு – மிளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி – லுறைவோனே
சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : மகர கேதனத்தன் (சுவாமிமலை) – திருப்புகழ் 229