சந்ததம் பந்த (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 13 

சந்ததம் பந்தத் – தொடராலே
சஞ்சலந் துஞ்சித் – திரியாதே

கந்தனென் றென்றுற் – றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் – றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் – புணர்வோனே
சங்கரன் பங்கிற் – சிவைபாலா

செந்திலங் கண்டிக் – கதிர்வேலா
தென்பரங் குன்றிற் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : சருவும்படி (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *