சங்கை தான் ஒன்று (திருச்செந்தூர்) – திருப்புகழ் 56

சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே
சஞ்சலா – ரம்பமாயன்

சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
சம்ப்ரமா – நந்தமாயன்

மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்
வம்பிலே – துன்புறாமே

வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே
வந்துநீ – யன்பிலாள்வாய்

கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே – விஞ்சையூரா

கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா
கண்டலே – சன்சொல்வீரா

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்றுமோ – தும்ப்ரதாபா

செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்
செந்தில்வாழ் – தம்பிரானே.

இதையும் படிக்கலாம் : சத்தம் மிகு ஏழு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 57

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *