சிரசில் 5 முறை குட்டிக்கொள்வது ஏன்?

எந்த ஒரு விஷயத்தை தொடங்கினாலும் முதலில் ‘சுக்லாம்பரதரம்’ என்ற மந்திரத்தை நாம் சொல்வோம்.

இதன் பொருள் விநாயகர் எல்லாமுமாக இருக்கிறார். அந்த ஸ்லோகத்தைச் சொன்னால் தெரியும்.

“சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்

ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே”

சுக்லாம்பரதர – வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.

விஷ்ணு – எல்லா இடத்திலேயும் பரவியிருப்பவர்.

சசிவர்ண – நிலா மாதிரி நிறம் உடையவர்.

ப்ரஸந்த வதந – நல்ல மலர்ந்த முகமுள்ளவரான இவரை தியானிக்க வேண்டும் என்று வருகிறது.

இந்த ஐந்து வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவப் பலன்கள் கிடைக்கும்.

மனித உடலில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என ஏழு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் சுவாச நடப்பு நடக்கிறது.

சிரசில் இருக்கும் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்புகளின் வழியே சுவாசத்தோடு பாய்வதற்காகவே விநாயகர் முன் சிரசில் குட்டிக் கொள்கிறோம்.

இதையும் படிக்கலாம் : குழந்தை பாக்கியம் கிடைக்க கணேச பஞ்சரத்தினம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *