
சொரியு முகிலைப் பதும நிதியைச்
சுரபி தருவைச் – சமமாகச்
சொலியு மனமெட் டனையு நெகிழ்விற்
சுமட ரருகுற் – றியல்வாணர்
தெரியு மருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக் – கவிபாடித்
திரியு மருள்விட் டுனது குவளைச்
சிகரி பகரப் – பெறுவேனோ
கரிய புருவச் சிலையும் வளையக்
கடையில் விடமெத் – தியநீலக்
கடிய கணைபட் டுருவ வெருவிக்
கலைகள் பலபட் – டனகானிற்
குரிய குமரிக் கபய மெனநெக்
குபய சரணத் – தினில்வீழா
உழையின் மகளைத் தழுவ மயலுற்
றுருகு முருகப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : பழனி திருப்புகழ்..!