திமிர உததி (பழநி) – திருப்புகழ் 168 

திமிர வுததி யனைய நரக
செனன மதனில் – விடுவாயேல்

செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு – மணுகாதே

அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் – வரவேநின்

அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் – வரவேணும்

சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள – மிகவேநீள்

சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை – விடுவோனே

வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் – மருகோனே

மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : தோகைமயிலே கமல (பழநி) – திருப்புகழ் 169 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *