திருமண திருப்புகழ் பாடல் வரிகள்..!

திருப்புகழ் பாடலை தினமும் மூன்று தடவை வீதம்,48 நாட்கள் தொடர்ந்து வீட்டுப் பூஜையறையில் பாடிட திருமணத் தடை நீங்கும். யார் பாடுகிறார்களோ, அவர்களுக்கு இந்த 48 நாட்களில் இடையில் பாடமுடியாத சூழல் வந்தால், அவருக்குப் பதிலாக குடும்ப உறுப்பினர் வேறொருவர் அந்த நாட்களில் பாடலாம். இதை மனதுக்குள்ளும் பாடலாம்.

திருமண திருப்புகழ்

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த

மிகவானி லிந்து வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற

வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட

கொடிதான துன்ப மயில் தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து

குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த

வழிபாடு தந்த மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச

வடிவே லெறிந்த அதிதீரா

அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு

மடியா ரிடைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து

அலைவா யுகந்த பெருமாளே .

இதையும் படிக்கலாம் : திருச்செந்தூர் திருப்புகழ்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *