உம்பர் தரு (விநாயகர்) – திருப்புகழ் 3

உம்பர்தருத் தேனுமணிக் – கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் – துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் -பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் – றருள்வாயே

தம்பிதனக் காகவனத் – தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் – கனியோனே

அன்பர்தமக் கான நிலைப் – பொருளோனே
ஐந்து கரத் தானை முகப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : நினது திருவடி (விநாயகர்) – திருப்புகழ் 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *