
வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை
வந்துந் தியதிரு – மதனாலே
வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
வஞ்சம் பதும்விடு – மதனாலே
பங்கம் படுமென தங்கந் தனிலுதி
பண்பொன் றியவொரு – கொடியான
பஞ்சொன் றியமயில் நெஞ்சொன் றியெயழல்
பொன்றுந் தனிமையை – நினையாயோ
தெங்கந் திரளுட னெங்குங் கதலிகள்
சென்றொன் றியபொழி – லதனூடே
தெந்தெந் தெனதென என்றண் டுறஅளி
நின்றுந் திகழ்வொடு – மயிலாடப்
பொங்குஞ் சுனைகளி லெங்குங் குவளைகள்
என்றும் புகழ்பெற – மலரீனும்
பொன்றென் றணிகையில் நின்றங் கெழுபுவி
யென்றுஞ் செயவல – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : வட்ட வாள் தன (திருத்தணிகை) – திருப்புகழ் 298