வரிக் கலையின் (திருத்தணிகை) – திருப்புகழ் 299 

வரிக்கலையி னிகரான விழிக்கடையி லிளைஞோரை
மயக்கியிடு மடவார்கள் – மயலாலே

மதிக்குளறி யுளகாசு மவர்க்குதவி மிடியாகி
வயிற்றிலெரி மிகமூள – அதனாலே

ஒருத்தருட னுறவாகி ஒருத்தரொடு பகையாகி
ஒருத்தர்தமை மிகநாடி – யவரோடே

உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
உயர்ச்சிபெறு குணசீல – மருள்வாயே

விரித்தருண கிரிநாத னுரைத்ததமி ழெனுமாலை
மிகுத்தபல முடனோத – மகிழ்வோனே

வெடித்தமணர் கழுவேற ஒருத்திகண வனுமீள
விளைத்ததொரு தமிழ்பாடு – புலவோனே

செருக்கியிடு பொருசூரர் குலத்தையடி யறமோது
திருக்கையினில் வடிவேலை – யுடையோனே

திருக்குலவு மொருநீல மலர்ச்சுனையி லழகான
திருத்தணிகை மலைமேவு – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : வார் உற்று எழும் (திருத்தணிகை) – திருப்புகழ் 300 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *