விதி போலும் உந்து (திருச்செந்தூர்) – திருப்புகழ் 99 

விதிபோலு முந்த விழியாலு மிந்து
நுதலாலு மொன்றி – யிளைஞோர்தம்

விரிவான சிந்தை யுருவாகி நொந்து
விறல்வேறு சிந்தை – வினையாலே

இதமாகி யின்ப மதுபோத வுண்டு
இனிதாளு மென்று – மொழிமாதர்

இருளாய துன்ப மருள்மாயை வந்து
எனையீர்வ தென்றும் – ஒழியாதோ

மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி
வருமால முண்டு – விடையேறி

மறவாத சிந்தை யடியார்கள் பங்கில்
வருதேவ சம்பு – தருபாலா

அதிமாய மொன்றி வருசூரர் பொன்ற
அயில்வேல்கொ டன்று – பொரும்வீரா

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவாயு கந்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : விந்ததில் ஊறி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *