விழியால் மருட்டி (சுவாமிமலை) – திருப்புகழ் 238 

விழியால்ம ருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு
விரகான லத்த ழுந்த – நகையாடி

விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்ச
விளையாட லுக்கி சைந்து – சிலநாள்மேல்

மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த
முழுமாயை யிற்பி ணங்கள் – வசமாகி

முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்று
முதிராத நற்ப தங்கள் – தருவாயே

பொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று
பொருதாளெ டுத்த தந்தை – மகிழ்வோனே

புருகூத னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட
புனிதாம்ரு கக்க ரும்பு – புணர்மார்பா

செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று
திருவாய்மை செப்பி நின்ற – முருகோனே

திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற
திருவேர கத்த மர்ந்த – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : அமைவுற்று அடைய (திருத்தணிகை) – திருப்புகழ் 239 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *