கணபதி ஹோமம் செய்வதால் என்ன பலன்கள்?

வெள்ளிக்கிழமையன்று அருகம்புல், தேங்காய் சேர்த்து கணபதி ஹோமம் செய்தால் வளமும், நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

நாயுருவி கொண்டு கணபதி ஹோமம் செய்வதால் கிரக தோஷங்கள் விலகும்.

செந்தாமரைகொண்டு ஹோமம் செய்வதால் பெரும் செல்வம் பெருகும்.

வெண்ணிற நீர்நெர்ச்சி கொண்டு ஹோமம் செய்வதால் உயர்வை பெறலாம்.

கெட்டி பதம் தயிருடன் ஹோமம் செய்தால் செல்வம் பெருகும்.

நீலோற்பவ மலரால் ஹோமம் செய்ய, அனைத்து மக்களும் வசியமாவர்.

வெல்லம், வாழைப்பழம், பாயசம், தேங்காய் ஆகியவற்றை நெய்யில் கலந்து ஹோமம் செய்தால் விருப்பம் நிறைவேறும்.

செவ்வாய்கிழமையில் விநாயகப் பெருமானையும், வெள்ளிக் கிழமை சண்டியையும் வழிபட ராகு, கேதுவின் தாக்கம் நீங்கும்.

இதையும் படிக்கலாம் : விநாயகர் காயத்திரி மந்திரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *