பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன பலன் தெரியுமா?

அறுவடை பண்டிகை என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையானது இந்திரனுக்கும், சூரியனுக்கும், விவசாயத்திற்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் என்பது பொங்கு என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். அறுவடை முடிந்து புது நெல் வந்திருக்கும் ஆதலால் அதைக் குத்தி அதில்தான் பொங்கலிட வேண்டும் என்பது விவசாய பெருமக்களின் நம்பிக்கை. நம் வாழ்க்கையில் வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது.

புதிய பொங்க பானையின் கழுத்துப்பகுதிகளில் மஞ்சள் கொத்து கட்டி, பானையைச் சுற்றி விபூதியை பூசி, மஞ்சள் மற்றும் குங்குமம் ஆகியவற்றால் பொட்டிட்டு அலங்கரித்து.  பொங்க பானையில் நீரும், பாலும் ஊற்றி நிரப்பி, அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும் நீரும் சூடாகி நுரைத்துப்பொங்கும் போது பொங்கலோ பொங்கல் என்று சூரியனைப்பார்த்து வணங்குவது தான் நமது பண்பாடு.

பொங்கல் பொங்கும் போது, அந்த பால் எந்த திசையில் பொங்கி வழிகிறதோ, அந்த திசையை வைத்து அந்த ஆண்டு முழுவதும் எப்படி இருக்கும் என்று நமது முன்னோர்கள் கணித்து கூறியுள்ளனர். இப்போது பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

பொங்கல் எந்த திசையில் பொங்கினால் என்ன பலன்

கிழக்கு

கிழக்கு திசையில் பொங்கல் பொங்குவது நல்லது. நாம் வைக்கும் பொங்கல் கிழக்கு திசையில் பொங்கினால் புது வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டு. எதையாவது வாங்க திட்டமிட்டிருந்தால், அதை விரைவில் வாங்குவீர்கள். மேலும் ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்புள்ளது.

மேற்கு

மேற்கு திசையில் பொங்கல் பொங்கினால், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீட்டில் திருமண வயதில் இருப்போருக்கு, நல்ல வரன் கிடைத்து, விரைவில் திருமணம் நடக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். சுப செலவுகள் அதிகமாகும்.

வடக்கு

வடக்கு திசையில் பொங்கினால், பண வரவு அதிகரிக்குமாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் சுமூகமாக முடியும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் சிக்கலின்றி திரும்ப வரும்.

தெற்கு

தெற்கு திசையில் பொங்கினால், அந்த வருடம் முழுவதும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், எப்போதுமே மிகுந்த சோர்வுடன் காணப்படுவீர்கள். வீட்டில் திருமண வயதில் இருப்போருக்கு, திருமணம் சற்று தாமதமாகவே நடக்கும். எனவே, ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *