கைத்தல நிறைகனி (வயலூர்) – திருப்புகழ் 1

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் – அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!
கற்பகம் எனவினை – கடிதேகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய – மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு – பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய – முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த – அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புனம் அதனிடை – இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : பக்கரை விசித்ரமணி (விநாயகர்) – திருப்புகழ் 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *