கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில்

கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலம் ஆகும். இத்தலத்தின் மூலவர் நவக்கிரங்களில் ஒருவரான கேது தலமாகும்.

மூலவர் நாகநாதர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன்/தாயார் சவுந்தர்யநாயகி
தல விருட்சம் மூங்கில்
தீர்த்தம் நாகதீர்த்தம்
ஆகமம் காமிகம்
அமைத்தவர் சோழர்கள்
ஊர் கீழப்பெரும்பள்ளம்
மாவட்டம் மயிலாடுதுறை

தல வரலாறு

naganathar temple history

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடந்து அமுதத்தைப் பெறச் சென்ற போது, ​​வாசுகி என்ற பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமானாள். ஒரு கட்டத்தில், அது சோர்வில் விஷத்தை உமிழ்ந்தது. பயந்துபோன தேவர்கள் உதவிக்காக சிவனை அணுகினர். விஷத்தை விழுங்கி தேவர்களைக் காப்பாற்றினார். வாசுகி தனது விஷத்தை சிவபெருமானால் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது.

வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அவளது தியாகத்தை போற்றினார். அந்த நேரத்தில், வாசுகி தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது. சிவன் அதன் வேண்டுகோளை ஏற்று, நாகத்தின் பெயரைத் தாங்கி, “நாகநாதர்” என்ற திருநாமத்துடன் இக்கோயிலில் அமர்ந்தார்.

கோயில் அமைப்பு

kethu temple

நுழைவாயிலில் இறைவன் தேவியுடன் காளைமீது அமர்ந்த நிலையில் உள்ள சுதைச்சிற்பம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். மூலவராக நாகநாதர் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார்.

மூலவர் சன்னதியின் இடப்புறம் கேது சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், துர்க்கை, யோக நரசிம்மர், லட்சுமி நாராயணர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

தல பெருமை

இங்கு கேது முக்கிய தெய்வமாக இருப்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. கேது சன்னதிக்கு அருகில் இரண்டு சூரியன் சிலைகளும், சனீஸ்வரர் சிலையும் உள்ளன. உத்ராயண புண்ணிய காலத்தில் (தை- ஆனி) ஒரு சூரியனுக்கும், தெட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி- மார்கழி) மற்றொரு சூரியனுக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

கேது பகவான்

kethu

கேது பகவான் பிறப்பால் அசுர வம்சத்தைச் சேர்ந்தவராவார்.இவரது இளமைப் பெயர் ஸ்வர்பானு. காசிப முனிவரின் மகன் விப்ரசித்து கேது பகவானின் தந்தை. தாய் சிம்கிகை. இதனால் சம்கிகேயன் என்றொரு பெயரும் கேது பகவானுக்கு உண்டு.

இக்கோயிலில் கேது பகவான் தனிசன்னதியில் மேற்கு நோக்கி இருக்கிறார். பாம்பு தலையுடனும், மனித உடலுடனும் உள்ள இவர், சிம்ம பீடத்தில் இரு கை கூப்பி சிவசன்னதியை நோக்கி வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஞானகாரகனான இவர் இங்கு அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரைக் கண்டு பயப்படத் தேவையில்லை. தன்னால் பாதிக்கப்படும் ராசியினருக்கு இவர் நன்மையே செய்வார். படிப்பில் முன்னேற, குடும்ப விருத்தி பெற இவரிடம் வேண்டிக் கொள்ளலாம்.

ஜாதக ரீதியாக நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரையும், பின் கேதுவையும் வழிபட வேண்டும். கேதுவிற்குரிய செவ்வரளி மலர் வைத்து, கொள்ளு சாத நைவேத்யம் படைத்து, ஏழு தீபம் ஏற்றி வணங்குவது விசேஷம்.

நிறம் சிவப்பு
மலர் செவ்வரளி
தானியம் கொள்
திசை வடமேற்கு
காரகம் ஞானம்,மோட்சம்
உச்சம் விருச்சகம்
நட்சத்திரங்கள் அசுவனி, மகம், முலம்
பால் அலி
நட்பு சனி, சுக்கிரன்
பகை சூரியன், சந்திரன், செவ்வாய்
சமம் புதன், குரு
திசை காலம் 7 ஆண்டுகள்
கோசர காலம் 1 1/2 வருடம்

கேது பரிகார தலம்

இக்கோயிலில் கேது பகவானுக்கு ராகுகாலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகிறார்கள். கொள்ளு சாத பிரசாதத்தை இங்கேயே விநியோகித்துவிட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. இதை கோயிலிலேயே செய்து தருகிறார்கள்.

சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் இவரை வழிபடுவது விசேஷம். அபிஷேகத்திற்கு, தனிப்பட்ட முறையில் ஹோமம் நடத்துவதற்கு கட்டணம் வசூலிக்கின்றனர். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்னை, விபத்து, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்னைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக்கொள்ளலாம். பங்குனியில் வாசுகி உற்சவம் நடக்கிறது. விழாவின் மூன்றாம் நாளில் கேதுவிற்கு, சிவன் காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கும். வருடத்தில் இவ்விழாவின் போதும், கேது பெயர்ச்சியின் போது மட்டுமே, கேது வீதியுலா செல்வார்.

தல சிறப்பு

இத்தல விநாயகர் அனுக்கிரக விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்களில் இத்தலம் கேதுவுக்கு உரியது.

ராகு கேது பெயர்ச்சியன்று விசேஷ ஹோமம் நடக்கிறது. அர்ச்சகர்களே இதை நடத்த உள்ளனர். இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. கேதுவிற்கு உரிய எண் 7. எனவே, 16 வித பூஜை செய்து, 7 லட்சம் ஜபமந்திரம் சொல்லி, பின்பு கொள்ளு தானியம், கொள்ளினால் செய்யப்பட்ட பாயசம், சூர்ணம், வடை, சாதம், பொங்கல் மற்றும் கொள் உருண்டை என 7 விதமான நைவேத்யங்களை ஹோமத்தில் இடுகின்றனர். பக்தர்கள் 16 விதமான தானங்களை அந்தணர்களுக்கு செய்வதன் மூலம் பலனடையலாம். அன்று 7 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. இதற்குரிய பொருட்களையும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் முன்னதாகவே கொடுக்கலாம்.

திருவிழா

ஐப்பசியில் அன்னாபிஷேகம், சிவராத்திரி, பங்குனி வாசுகி உற்சவம், பிரதோசம்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன்

பயம் நீங்க, நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனை மற்றும் தொழில், வியாபாரம் சிறக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, ஆயுள் அதிகரிக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, தலைமுறை சிறக்க நாகநாதரையும், கேது பகவானையும் வழிபடலாம்.

கேது தசாபுத்தி ஜாதகத்தில் நடப்பவர்கள், ஜென்ம நட்சத்திரத்தில் பாலபிஷேகம் செய்து வழிபடலாம்.

கேது பகவானுக்கு கொள்ளு சாத நைவேத்யம் படைத்து, பலவர்ண வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.

நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும்.

மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

முகவரி

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் (கேது தலம்),

கீழ்ப்பெரும்பள்ளம்,

மயிலாடுதுறை மாவட்டம் – 609 105.

தொலைபேசி எண் : +91- 4364 260 582, 275 222, 260 088, 260 424,94435 64642

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *