சருமத்தைப் பாதுகாக்கும் இயற்கையான ஃபேஸ் பேக்குகள்

face pack

இயற்கையான ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்தில் பூசி வந்தால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும். இந்த ஃபேஸ் பேக்குகளை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து நம் சருமத்தை பாதுகாத்து கொள்ளலாம்.

1. பாதி எலுமிச்சைப் பழத்தின் சாறு, அரை வெள்ளரிக்காய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பச்சைப் பயறு மாவு ஆகியவற்றை எடுத்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவலாம்.

  • எண்ணெய்ப் பசையை நீங்கும், பருக்கள் நீங்கும். முகம் பளபளப்புடன் காணப்படும்

2. ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்து, இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

  • இயற்கையான ஃபேஸ் பேக்கை முகத்தில் பூசுவதால், வறண்ட தன்மை நீங்கி முகத்துக்குப் பொலிவு கிடைக்கும்.
  • சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.

இதையும் படிங்க : சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் எண்ணெய்கள்

3. இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பால், ஒரு டேபிள் ஸ்பூன் பச்சைப் பயறு மற்றும் ஒரு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, பிறகு இந்தக் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

  • நேச்சுரல் மாய்ஸ்ச்சரைசர் தரும் ஃபேஸ் பேக் இது. மிருதுவாக, மென்மையாகச் சருமம் மாறும்.
  • சூரியக் கதிர்களால் பாதித்த சருமத்துக்கு மிகவும் நல்லது.

4. ஒரு கப் பழுத்த பப்பாளி, ஒரு கப் பழுத்த வாழைப்பழம், ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரால் முகத்தைக் கழுவலாம்.

  • சருமம் புத்துணர்வாகும். ஈரப்பதத்துடன், மென்மையாகவும் இளமையாகவும் காணப்படும்.
  • இந்த வகை ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்தில் பூசி வந்தால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

5. கோதுமை மாவு 1 டீஸ்பூன், தேவையான அளவு பால் ஆகிய இரண்டையும் பேஸ்ட் பதத்துக்கு குழைத்து. இதை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

  • முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி சருமம் பளிச் என இருக்கும்.

6. 1 டீஸ்பூன் ஓட்ஸ், சந்தனத்தூளும் அல்லது சந்தன எண்ணெய் 3 துளி, மஞ்சள் 1 சிட்டிகை மற்றும் தேவையான அளவு பன்னீர் சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு குழைத்து. இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி தோலில் 5 நிமிடங்கள் மசாஜ் செய்து. பின் முகத்தை கழுவ வேண்டும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *